20 அடியை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி | Chembarambakkam Lake reaches 20 feet

1380156
Spread the love

காஞ்சிபுரம்: செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர்​மட்​டம் நேற்​றைய நில​வரப்​படி 19.28 அடி​யாக உள்​ளது. ஏரி​யின் மொத்த கொள்ளளவு 2429 மில்​லின் கன அடி​யாகும். நீர் வரத்து விநாடிக்கு 820 கன அடி​யாக பதி​வாகி​யுள்​ளது. இதனால் ஏரி​யின் மொத்த உயர​மான 24 அடி​யில், நீர்​மட்​டம் தற்​போது 20 அடியை நோக்​கிச் சென்று கொண்​டிருக்​கிறது.

அணை​யின் பாது​காப்பு கருதி ஏரி​யில் 21 முதல் 22 அடி வரை மட்​டுமே நீர் தேக்கி வைக்​கப்​படும். இந்த ஏரி​யின் ஐந்து கண் மதகு​களின் மீது அதி​காரி​கள் நடந்து செல்​வதற்​கும், ஷட்​டர்​களைத் திறப்​ப​தற்​கும் சிறிய அளவி​லான நடை​பாதை இருந்​தது. தற்​போது அதனை சுமார் எட்டு அடி அகலத்​துக்கு அதி​கரிக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. பேரிடர் காலங்​களில் அவசர வாக​னங்​கள், அதி​காரி​கள் செல்​வதற்கு இந்​தப் பாதை பயன்​படுத்​தப்​படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *