இந்நிலையில், கடந்த 95 நாள்களாக அவரது படகில் சேகரித்த மழை நீரை குடித்தும் கரப்பான்பூச்சி, பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை வேட்டையாடி சாப்பிட்டு அவர் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், கடந்த 15 நாள்களாக எந்தவொரு உணவும் கிடைக்காமல் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
பின்னர், அவர் பைட்டாவிலிருந்து பெரு நாட்டு தலைநகர் லிமாவுக்கு விமானம் மூலமாக அழைத்து செல்லப்பட்ட அவரை அங்குள்ள விமான நிலையத்தில் அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆராவாரத்துடனும் அந்நாட்டின் தேசிய பானமான பிஸ்கோவை கொடுத்து அவரை வரவேற்றனர்.
மேலும், சான் ஆண்டர்ஸ் மாவட்டத்திலுள்ள அவரது வீடு அமைந்துள்ள தெரு முழுவதும் அவரது வருகைக்காக அலங்கரிக்கப்பட்டு பட்டாசுக்கள் வெடித்து கேஸ்ட்ரோ வரவேற்கப்பட்டார். இத்துடன், அவர் மாயமான காலத்தில் கடந்த அவரது பிறந்த நாளை தற்போது கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கேஸ்ட்ரோவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிலிருந்து பயணித்து பசிபிக் பெருங்கடலில் மாயமான சால்வடார் நாட்டு மீனவரான ஜோஸ் சால்வடார் அல்வரெங்கா என்பவர் சுமார் 14 மாதங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு மார்ஷல் தீவுகளில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.