2025-க்கான இபி-1 க்ரீன் கார்டு விசா நிறைவு: அமெரிக்கா

dinamani2F2025 09
Spread the love

ஏற்கனவே, வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது முன்னுரிமை (இபி-2) விசாக்களுக்கான கட்டுப்பாடுகளை வெளியிட்ட நிலையில், இபி-1 கிரீன் கார்டு வழங்குவதற்கான கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால், நடப்பு ஆண்டில், இபி-1 மற்றும் இபி-2 விசா பிரிவின் கீழ் யாருக்கும் விசா வழங்கப்பட மாட்டாது என்றும், இதற்கான காலம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிலையில், முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விசா விண்ணப்பங்கள் 2025 அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பினால், இந்தியர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும், இபி-1 க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதிக காலம் காத்திருப்பவர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

எனவே, அக்டோபர் 1ஆம் தேதி இபி-1 மற்றும் இபி-2 விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முன்னதாக சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் முன்கூட்டியே பரிசீலிக்கப்பட்டாலும், அவர்கள் விண்ணப்பித்த இடங்களுக்கு ஏற்ப அது வரிசைப்படுத்தப்படும்.

இந்த விசாவுக்கான முன்னுரிமை தேதியை அடிப்படையாகக் கொண்டே இதன் தகுதியும் முக்கியத்துவம் பெறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *