> 2025 ஜூலை 20-ல் ஜப்பானில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில், ஆளும் லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி (LDP) மற்றும் கோமேய்தோ கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
இதனால் முன்பு இருந்த LDP-கோமேய்தோ கூட்டணி அரசு பலவீனமடைந்தது. தற்போது LDP தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே அரசு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய கூட்டணி பொருளாதாரம் மற்றும் பிராந்திய பாதுகாப்புப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் பிரதமராக தகைச்சி சனே பதவியேற்றுள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

> செப்டம்பர் 16, 2025-ல் நடைபெற்ற மலாவி (கிழக்கு ஆப்பிரிக்கா) அதிபர் தேர்தலில், முன்னாள் தலைவர் பீட்டர் முத்தாரிகா 56.8% வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அதிபர் லாசரஸ் சக்வேரா தோல்வியடைந்தார். 85 வயதான முத்தாரிகா, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
> செப்டம்பர் 3, 2025-ல் நடைபெற்ற ஜமைக்கா நாடாளுமன்ற தேர்தலில், ஜமைக்கா லேபர் பார்ட்டி அதிக இடங்களை வென்று மீண்டும் ஆட்சி அமைத்தது. PNP-யை தோற்கடித்த JLP தலைவர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானார். வன்முறை சம்பவங்களுக்கிடையே நடைபெற்ற இந்த தேர்தலில், JLP 34 இடங்களைப் பெற்று பெரும்பான்மை உறுதிப்படுத்தியது.