ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக் ஆகிய பனிப்பொழிவு உள்ள பகுதிகள் செப்டம்பர் – அக்டோபர் 2026-ல் கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி ‘மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைப் பெற அரசு திட்டமிட்டுள்ளதா?’ என எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ராய், “2027-ம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கேள்விகள் தொகுப்பை இறுதி செய்யும் பணியில் இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் இருக்கிறது” என்று பதிலளித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்,” என்று உறுதியளித்திருக்கிறார்.
மேலும் ஒரு பதிலில் அவர், “2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். இதில் தரவுகள் அனைத்தும் மொபைல் செயலிகள் மூலம் சேகரிக்கப்படும். அத்துடன், சுயமாகக் கணக்கெடுக்கும் வசதி (Self-enumeration) ஆன்லைன் மூலமாகவும் வழங்கப்படும்,” என்றும் தெரிவித்துள்ளார்.