வளர்ச்சி வேலை வாய்ப்பே எங்களின் பிரதான இலக்கு. பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம்.
தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ” தமிழகத்தில் உள்ள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்ற கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.
சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தேசிய ஜனநாயக கூட்டணி மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.