நேற்றும் விஜய் இந்த தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு வந்திருந்தார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஸ் என தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக விஜய் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த மீட்டிங்கில்தான் ‘என்ன ஆனாலும் நாம தனியாதான் போறோம். தனியாதான் எலெக்சனை சந்திக்கிறோம்’ என விஜய் கறாராக கூறியதாக கிசுகிசுக்கின்றனர் தலைமைக்கு நெருக்கமான நிர்வாகிகள்.

முதற்கட்டமாக வேட்பாளர்களை இறுதி செய்த விஜய், அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் தயார் செய்து கேட்டிருக்கிறார். அந்த வேட்பாளர்களையும் இந்த வாரத்துக்குள்ளேயே சந்திக்கவிருக்கிறார் என்கிறார்கள்.