2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

Dinamani2f2024 11 232f0mljbkyl2fsivakumar.jpg
Spread the love

காங்கிரஸ் தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான சிவகுமார் 2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் சிவகுமார், இது பாரத் பொம்மையின்(ஷிக்காவன் பாஜக வேட்பாளர்) தோல்வியென்று நான் கூறவில்லை, அவர் தந்தை செய்த செயலுக்கு மக்களிடம் வந்த செய்தி.

இரண்டு விஷயங்கள் வேலை – மேம்பாடு மற்றும் உத்தரவாதங்கள் மட்டுமே. குற்றச்சாட்டுகள் முன்வைப்பதை நிறுத்த வேண்டும், பணியில் கவனம் செலுத்த வேண்டும், இதுவே மக்களிடம் இருந்து வந்த செய்தி.

இதையும் படிக்க: உ.பி. இடைத்தேர்தல்: பாஜக கூட்டணி 7 இடங்களில் முன்னிலை!

இதுதான் ஆரம்பம். வரும் 2028 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சந்தூர், ஷிக்காவன், சென்னப்பட்டணம் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *