23 நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்ட உதகை மலை ரயில்!

Dinamani2f2024 09 012f20cznn372fnilagiri.jpg
Spread the love

மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை 23 நாள்களுக்கு பிறகு இன்று தொடங்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் பாதையில் பாறாங்கற்கள், மண் சரிந்து ரயில் பாதையை மூடியது.

மரங்கள் சாய்ந்து ரயில் பாதையின் குறுக்கே விழுந்தன. ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 9ம் தேதி முதல் நேற்று 31ஆம் தேதி வரை உதகை மலை ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *