24-வது ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை | Political leaders pay tribute to actor Sivaji Ganesan

1370320
Spread the love

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினர் அன்​ன​தானம் வழங்​கினர்.

நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி சென்னை அடை​யாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்​டபத்​தில் சிவாஜி​யின் சிலைக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, அதன் அருகே அவரது படம் அலங்கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தது.

சிவாஜி கணேசனின் மகனும், நடிகரு​மான பிரபு, அவரது மகன் விக்​ரம் ​பிரபு உடன் வருகை தந்து சிவாஜி கணேசனின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்து பாஜக மாநிலச் செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் மரி​யாதை செலுத்​தி​னார்.

சிவாஜி கணேசனின் நினைவு தினத்தை முன்​னிட்டு சத்​தி​யமூர்த்தி பவனில் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த அவரது படத்​துக்கு தமிழக காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கிருஷ்ண​சாமி, கே.​வி.தங்​க​பாலு ஆகியோர் மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்து காங்​கிரஸ் கலைப்​பிரிவு சார்​பில் சிறப்பு அன்​ன​தான​மும் சத்​தி​ய மூர்த்தி பவனின் நேற்று வழங்​கப்​பட்​டது.

இதற்​கிடையே சிவாஜி கணேசனின் நினை​வு​தினம் குறித்து அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: நடிப்​பின் இலக்​கணம், தான் ஏற்​றக் கதா​பாத்​திரங்​களாகவே வாழ்ந்து கோடிக்​கணக்​கான ரசிகர்​களை ஈர்த்த திரை ஆளுமை சிவாஜி கணேசனின் நினைவு நாளில், தமிழ்த் திரை​யுல​கில் அவர் நிகழ்த்​திய காலத்​தால் அழியா சாதனை​களை நினை​வு​கூர்​கிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இந்​திய விடு​தலைக்கு பிறகு சுதந்​திரப் போராட்​டத்​தில் நம்​முடைய முன்​னோர்​கள் செய்த தியாகத்தை அடுத்த தலை​முறை​களுக்கு திரை​யின் மூலம் வெளிப்​படுத்​திய மாபெரும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவை இந்​நாளில் போற்​று​வோம்.’

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: கலைத்​திறமை​யால் தமிழ்த் திரை​கை உலக அளவில் கொண்டு சேர்த்​தவர், விருதுகளுக்கு பெருமை சேர்த்த சிம்​மக் குரலோன் சிவாஜி கணேசனின் நினைவை போற்றி வணங்​கு​வோம்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: தமிழ்ப் பேரினத்​தின் பெரு​மைமிகு கலை அடை​யாளம் சிவாஜி கணேசன். தன்​னிகரற்ற நடிப்​பாற்​றலால் தமிழர்​களின் கலைத்​திறனை தரணிக்கு காட்​டிய தனிப்​பெருங்​கலைஞன் பெரும்​ புகழை போற்​று​வோம்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: உடல்​மொழி​யாலும், உணர்​வுப்​பூர்​வ​மான வசன உச்​சரிப்​பாலும் நாட்டு மக்​கள் மனதில் தனக்​கென தனி சிம்​மாசனம் போட்டு அமர்ந்​திருக்​கும் நடிப்பு சக்​கர​வர்த்​தி சிவாஜி கணேசனை எந்​நாளும்​ நினை​வில்​ வைத்​து ​போற்​றுவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *