கடந்த 3 மாதங்களில் 2 முறை அரசு பங்களா ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லியில் இது குறித்து மேலும் அதிஷி பேசியதாவது,
தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதேவேளையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு முதல்வர் இல்லத்திலிருந்து என்னை இரண்டாவது முறையாக வெளியேற்றியுள்ளது.
குடியிருப்புகளில் இருந்து அகற்றுவதன் மூலம் எங்கள் பணிகளை முடக்கலாம் என பாஜக நினைக்கிறது. எனது குடும்பத்தைப் பற்றி அவதூறாகப் பேசுகிறது.
வீடுகளை எங்களிடம் இருந்து பறிக்கலாம். ஆனால், மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை பறிக்க முடியாது.