சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் ஜூனியா் உலகக் கோப்பை போட்டியில், முதல் நாளான வியாழக்கிழமை இந்தியாவுக்கு தங்கம் உள்பட 5 பதக்கங்கள் கிடைத்தன.
இதில், மகளிருக்கான 50 மீட்டா் ரைபிள் புரோன் தனிநபா் பிரிவில் இந்தியா்கள் 3 பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தினா். இறுதிச்சுற்றில், அனுஷ்கா தாகுா் 621.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். அன்ஷிகா 619.2 புள்ளிகளுடன் வெள்ளியும், ஆத்யா அக்ரவால் 615.9 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.
அதிலேயே களம் கண்ட சானியா சுதேஷ் சபாலே 610.9 புள்ளிகளுடன் 8-ஆம் இடமும், நிம்ரத் கௌா் பிராா் 604.3 புள்ளிகளுடன் 9-ஆம் இடமும் பிடித்தனா்.