3 மாவட்டங்களில் நிர்வாகக் குழு கூட்டம்: மமதா பானர்ஜி

Dinamani2f2024 12 182fe4sguu502f20241121309l.jpg
Spread the love

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அடுத்த வாரம் மூன்று மாவட்டங்களில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

முதல் கூட்டம் ஜனவரி 20 ஆம் தேதி முர்ஷிதாபாத்தில் நடைபெறுகிறது. முர்ஷிதாபாத் கூட்டத்திற்குப் பிறகு, பானர்ஜி மால்டா மற்றும் அலிபுர்துவாரில் நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

முர்ஷிதாபாத்தின் லால்பாக் நவாப் பகதூர் நிறுவன மைதானத்தில் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது .இந்த கூட்டத்தில் பங்கேற்க திங்கள்கிழமை, முதல்வர் முர்ஷிதாபாத் செல்லவுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

திங்கள்கிழமை மால்டாவுக்குச் செல்லும் முதல்வர், ஜனவரி 21ஆம் தேதி அங்கு ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.

ஜனவரி 22 அன்று அலிபுர்துவாரில் பானர்ஜி நிர்வாக மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த நாள் அலிபுர்துவாரில் உள்ள சுபாஷினி தேயிலை எஸ்டேட்டில் நேதாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடுவார் என்று அந்த அதிகாரி கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *