`30% கமிஷன்… கடவுள் சொத்திலும் கொள்ளை!’ – புதுச்சேரி என்.டி.ஏ அரசை ரவுண்டு கட்டிய ராகுல் காந்தி

Spread the love

தேர்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வந்த ராகுல் காந்தி, “புதுச்சேரிக்கு வருவது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். அதனால் புதுச்சேரி வந்து உங்களைப் பார்க்க நான் ஆசைப்படுவேன். புதுச்சேரியை நான் நேசிப்பதற்கு காரணம் இந்த மண்ணின் இயற்கை வளம் மட்டுமல்ல, உங்களின் அன்பும், நட்பும்தான்.

ஆனால் இப்போது இங்கு வரும்போது என் மனதில் கவலைகள் நிழலாடுகின்றன. ஏன் என்றால் தற்போது இந்த மாநிலத்தை ஆட்சி செய்கின்றவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் எங்கேயோ இருந்து இந்த மாநிலத்தை ஆட்சி செய்கிறார்கள்.

மேலும் தற்போது இருக்கும் அரசு, புதுச்சேரி மக்களின் விருப்பங்களையும், வேட்கைகளையும் உள்வாங்கிக் கொண்ட அரசு இல்லை. எங்கேயோ இருக்கின்ற சிலர், இந்த மக்களின் மீது திணிக்கின்றன கருத்துகளின் அடிப்படையில் நடக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது.

புதுச்சேரியில் ராகுல் காந்தி

புதுச்சேரியில் ராகுல் காந்தி

பா.ஜ.க-வின் கொள்கைகளையும் சித்தாந்தங்களையும் இந்த மண்ணில் புகுத்த நினைக்கிறார்களே தவிர, புதுச்சேரி மக்களின் எண்ணத்தை உள்வாங்கி, அவர்களின் விருப்பத்தை உள்வாங்கி நடத்தும் ஆட்சியாக இந்த ஆட்சி இல்லை.

இந்த மாநிலத்தை துணைநிலை ஆளுநரை வைத்து ரிமோட் மூலம் பா.ஜ.க ஆட்டிப் படைக்கிறதே தவிர, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில்லை. இங்கே பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

அதேபோல உயிரோட்டமாக இருந்த தொழில்துறை சிறிது சிறிதாக நசிந்து இறந்து கொண்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. புதுச்சேரி அதானிக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது. காரைக்கால் துறைமுகத்தை ஏற்கனவே அவருக்கு விற்றுவிட்டார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *