32 cases against the person arrested in the murder case of a schoolgirl in Thoothukudi-தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதானவர் மீது 32 வழக்குகள்

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு தர்ம முனீஸ்வரன், ஈஸ்வரன், அழகு முனீஸ்வரன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில், தர்ம முனீஸ்வரன், பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊர் பகுதியில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமாகியும் அதையே தொடர்ந்துள்ளார். இதனால், தர்மமுனீஸ்வரனின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்

இந்த நிலையில், அவருக்கு கீழஈராலைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஊர்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 19.08.2018-ல் விருதுநகர் மாவட்டம், நரிக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் சென்றுள்ளார்.

2019-ல் நரிப்பையூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை தாக்கி செயின் பறித்துச் சென்றுள்ளார். இதே போன்று, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2019-ல் கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் இருந்தார்.     

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *