33 பயங்கரவாதிகள் கொலை… மீட்புப் பணி நிறைவு!

Dinamani2f2025 03 122f8geyqw5s2fap25071626336089.jpg
Spread the love

மீட்புப் பணிகள் நிறைவு:

அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், ரயிலில் சிக்கியிருந்த 346 பயணிகளும் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்:

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்,”ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் குறித்து முதல்வர் சர்ஃபராஸ் புக்தியுடன் பேசினேன். இந்த கொடூரமான சம்பவத்தில் அப்பாவி உயிர்களை இழந்த நம் நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தானின் உறுதியை அசைக்க முடியாது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *