4 கோயில்களின் 54 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் அமைச்சர்கள் ஒப்படைப்பு | Ministers hand over 54 kg of gold from 4 temples to State Bank of India

1379603
Spread the love

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில் உட்பட 4 கோயில்​களின் 53.386 கிலோ மதிப்​பிலான பயன்​பாட்​டில் இல்​லாத தங்​கத்​தை, மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் பாரத ஸ்டேட் வங்​கி​யில், அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி, பி.கே. சேகர்​பாபு ஆகியோர், ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிப​தி, துரை​சாமி ராஜூ முன்​னிலை​யில் ஒப்​படைத்​தனர்.

காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயி​லில் நேற்று நடை​பெற்​ற நிகழ்ச்சியில் காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயில், குன்​றத்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோ​யில், திரு​விடந்தை நித்​திய கல்​யாண பெரு​மாள்​ கோ​யில், திரு​மலை​வை​யா​வூர் பிரசன்ன வெங்​கடேசப் பெரு​மாள் கோயில் ஆகிய கோயில்​களில் பயன்​பாட்​டில் இல்​லாத பிரித்​தெடுக்​கப்​பட்ட 53 கிலோ 386 கிராம் எடை​யுள்ள பலமாற்​றுப் பொன் இனங்​களை மும்​பை​யிலுள்ள மத்​திய அரசின் தங்க உருக்​காலை​யில் உருக்​கி, தங்க முதலீட்​டுத் திட்​டத்​தில் முதலீடு செய்​யும் வகை​யில் பாரத ஸ்டேட் வங்​கி​யின் மண்டல மேலா​ளர் செந்​தில்​கு​மாரிடம் அமைச்​சர்​கள் ஆர்​.​காந்​தி,

பி.கே. சேகர்​பாபு, ஓய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிப​தி, துரை​சாமி ராஜூ ஆகியோர் ஒப்​படைத்​தனர். அமைச்​சர் சேகர்​பாபு செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: காஞ்​சிபுரம் காமாட்​சி​யம்​மன் கோயி​லிலிருந்து 42 கிலோ 326 கிராம், குன்​றத்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லிலிருந்து 2 கிலோ 640 கிராம், திரு​விடந்தை நித்​திய கல்​யாண பெரு​மாள் கோயி​லிலிருந்து 4 கிலோ 070 கிராம், திரு​மலை​வை​யா​வூர், பிரசன்ன வெங்​கடேசப் பெரு​மாள் கோயி​லிலிருந்து 4 கிலோ 350 கிராம் என மொத்​தம் 53 கிலோ 386 கிராம் எடை​யுள்ள பலமாற்​றுப் பொன் இனங்​கள் இன்​றைய தினம் பாரத ஸ்டேட் வங்​கி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்​நிகழ்ச்​சி​யில், காஞ்​சிபுரம் ஆட்​சி​யர் கலைச்​செல்​வி, இந்து சமய அறநிலை​யத் துறை கூடு​தல் ஆணை​யர் சி. பழனி, காஞ்​சிபுரம் எம்​பி. செல்​வம், எம்​எல்​ஏக்​கள் சுந்​தர், எழிலரசன், மாநக​ராட்சி மேயர் மகாலட்​சுமி, இணை ஆணை​யர்​கள் வான்​ம​தி, குமரதுரை, துணை ஆணை​யர்​கள் சித்​ராதே​வி, ஜெயா, உதவி ஆணை​யர்​கள் கார்த்​தி​கேயன், ராஜலட்​சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *