கராச்சியில் மின் மற்றும் நீர் பற்றாக்குறையால் 190 போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நீண்டகால மின் பற்றாக்குறை மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக போராட்டம் நடத்தப்பட்டதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கராச்சி பகுதியில் ஜஹாங்கீர் சாலையில் 4 நாள்களாக தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாததால், அப்பகுதி மக்கள் 4 நாள்களாக எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தால் சாலையில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இந்தப் போராட்டங்கள் தவிர்த்து, ஓய்வூதிய பிரச்னை காரணமாக ஓய்வுபெற்ற ஊழியர்களும் போராட்டம் நடத்தினர்.