காயத்ரி இத்தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. அதோடு, காயத்ரியின் மனுவை புதிதாக விசாரிக்கும்படி குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. புதிய விசாரணைக்குப் பிறகு, தம்பதியினர் உண்மையில் திருமணம் செய்து கொண்டதை குடும்ப நீதிமன்றம் உறுதி செய்தது.

அதோடு, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தால் மட்டுமே கணவரின் புறக்கணிப்பை பரிசீலிக்க முடியும். தற்போதைய வழக்கில், விண்ணப்பதாரரின் வாய்மொழி சாட்சியங்கள் மூலம் அவர் கணவனால் கைவிடப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் அவர் தனது மகளுடன் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்” என்று குறிப்பிட்டது.
எனவே, மனுதாரருக்கு கணவன் மாதம் ரூ.10 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேசமயம், அப்பெண் தனது மகளுக்கும் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த கோரிக்கையை கோர்ட் நிராகரித்தது. காயத்ரியின் மகள் பட்டேலுக்கு பிறந்தவர் அல்லாததால், அவருக்கு பராமரிப்பு தொகை வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.