இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தன.
த்ரில்லிங்கான தருணத்தில் கடைசி ஓவரில் க்ருணல் பாண்டியா வீசிய முதல் பந்தில் சாண்ட்னெர் ஆட்டமிழந்தார். அவரது அடுத்த பந்திலேயே தீபக் சாஹரும் நடையைக் கட்டினார். 5-ஆவது பந்தில் நமானும் ஆட்டமிழந்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது; 12 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றியை ருசித்தது.
கடைசி ஓவரில் பெங்களூரு அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் பம்பரமாகச் சுழன்று அணியின் வெற்றிக்கு வித்திட்டது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.