அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபுணர் குழு ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “கல்லூரியில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் 39 சதவீதமும், மூத்த மருத்துவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் எண்ணிக்கையில் 65 சதவீதமும் பற்றாக்குறை இருக்கிறது.
மேலும், நோயாளிகளின் வருகை (OPD) 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதோடு, மருத்துவமனை படுக்கைகளில் 45 சதவீதம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. நூலகத்தில் இருக்க வேண்டிய புத்தகங்களில் 50 சதவீதம் மட்டுமே இருந்தன.
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி15 மருத்துவ இதழ்களுக்குப் பதிலாக இரண்டு இதழ்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தன. ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளும் தேசியத் தரத்திற்கு இணையாக இல்லை” எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதைத் தொடர்ந்து எம்பிபிஎஸ் (MBBS) படிப்புக்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது.