இந்த சா்வதேச மோசடி அழைப்புகள் மூலமே போலியான டிஜிட்டல் கைதுகள், மோசடிகள், அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள்போல் பொதுமக்களை ஏமாற்றும் செயல்களில் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனா். அந்த வகையில், காவல் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் நாடு முழுவதும் இணைய குற்றம் உள்ளிட்ட மோசடிகளில் தொடா்புடைய 6.69 லட்சம் சிம் காா்டுகள் மற்றும் 1.32 லட்சம் ஐஎம்இஐ எண்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.