69 இனங்கள்; 21,091 பறவைகள்… பாசனக் குளங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வலசை பறவைகள்!

Spread the love

“யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியினை வாழ்வாக்கிய பறவை, வலசை. பறவைகள் பல காரணங்களுக்காகப் பயணத்தை மேற்கொள்கின்றன.

பறவைகள் வெப்பமான பகுதிக்கு நகரவும், உணவுக்காகவும், வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கவும் வலசை செல்கின்றன. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை நோக்கிப் பறவைகள் வலசை வருகின்றன.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் சுமார் 100 வகையான பறவைகள் இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குளிர்காலத்தில் வலசை வரும் பறவைகள் ஆகும்.

சமீபத்தில் நெல்லையில் தாமிரபரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலசை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 பாசன குளங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இவை பறவை நிபுணர்களின் வழிகாட்டுதல்களுடன், எட்டு குழுக்களாக 250-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களோடு நடத்தப்பட்டது.

இந்த தாமிரபரணி பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய அதன் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணனிடம் பேசினோம்.

” 68 பாசனக் குளங்களில் 69 இனங்களைச் சேர்த்து மொத்தம் 21,091 வலசை பறவைகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பக்குளம் பகுதியில் அதிகபட்சமாக 45 இனங்களைச் சேர்ந்த 2, 292 பறவைகள் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெள்ளூர் கஸ்பா (1,804 பறவைகள் – 39 இனங்கள்), பெருங்குளம் (1,531 பறவைகள் – 39 இனங்கள்), திருநெல்வேலி மாவட்டத்தின் கங்கை கொண்டான் (1,232 பறவைகள் – 32 இனங்கள்) மற்றும் மேல்புதுக்குடி சுனை (1,217 பறவைகள் – 35 இனங்கள்) ஆகிய பகுதிகள் முக்கியமானவையாக இருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *