2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை அளவில் 7.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் 7 கோடி அறிதிறன் பேசிகள் விற்பனையாகின. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.9 சதவீதம் வளா்ச்சியாகும். அந்த மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை 21.5 சதவீதம் உயா்ந்து 59 லட்சமாக உள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஐ-போன் 16 மிக அதிகமாக விற்பனையான அறிதிறன் பேசியாக உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் ஒட்டுமொத்த அறிதிறன் பேசிகளின் விற்பனை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதங்களைவிட 7.3 சதவீதம் அதிகரித்து 3.7 கோடியாக இருந்தது.