8 மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடிப்பு

Dinamani2f2024 072f7a45ab99 Ac38 4b5c A1fc D4a903ce8cdc2faambur.jpg
Spread the love

உதவி வனப்பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், வனச்சரக அலுவலர்கள் பாபு (ஆம்பூர்), சேகர் (ஆலாங்காயம்), இந்துமதி (ஒடுக்கத்தூர்) மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த யானையைக் காட்டிற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 6 மணிக்கு ஆம்பூர் அருகே கீழ்முருங்கை கிராமப் பகுதியில் வனப்பகுதியின் எல்லையோரம் யானை விரட்டியடிக்கப்பட்டது. காலை 8 மணி வரையிலும் வனப்பகுதி எல்லையோரமே திரிந்து கொண்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் அந்த யானை காட்டுக்குள் செல்லவில்லை.

அந்த பகுதி செங்குத்தான மலையாக இருப்பதால் அதன்மீது ஏறி காட்டிற்குள் அந்த யானையால் செல்ல முடியாது. அது வயதான, கண்பார்வை குறைவான யானையாக இருப்பதால் மலை மீது ஏறிச் செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது.

மீண்டும் அந்த யானை கிராமப் பகுதிக்குள் வரலாம் என்பதால் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *