அதனால், மீண்டும் விமானம் யூ-டர்ன் போட்டு டெல்லியே திரும்பியிருக்கிறது. பின்னர், விமானிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று இந்தப் பயணிகளைப் போயிங் 777-300ER ரக விமானத்தில் கனடாவிற்கு அனுப்பியுள்ளனர்.
இடையில் பயணிகள் தங்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
நேரம் மட்டும் தான் வீண் என்று பார்த்தால், நேற்று சென்ற போயிங் 777-200LR-க்கு ஒரு மணிநேரத்திற்கு 8 – 9 டன் எரிப்பொருள் தேவைப்படுமாம்.
இப்போது எரிப்பொருள் தட்டுப்பாடு இருக்கும் சூழலில் இப்படியொரு சம்பவம்.