தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி- நயினார் சந்திப்பு
இந்தச் சூழலில்தான் இன்று (ஜன.9) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.