நிறைவேறாத முதல்வர் கனவு
1959ம் ஆண்டு பிறந்த அஜித்பவார் 1982ம் ஆண்டு முதல் முறையாக சர்க்கரை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ம் ஆண்டு புனே மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் அப்பதவியில் தொடர்ந்து 16 ஆண்டுகள் இருந்தார். 1991ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அஜித்பவார், 1992ம் ஆண்டு சரத்பவார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது அவரை அமைச்சராக்கினார். அதன் பிறகு காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது அஜித்பவார் தனது சித்தப்பாவுடன் இருந்தார்.

காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைத்தபோது துணை முதல்வர் பதவியேற்ற அஜித்பவார் தொடர்ச்சியாக துணை முதல்வராக இருந்து வந்தார்.
உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் அரசில் துணை முதல்வராக இருந்த அஜித்பவாருக்கு, தான் முதல்வராக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. இதைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்தக் கனவு நிறைவேறும் முன்பாக அஜித்பவார் அகால மரணமடைந்துவிட்டார்.
66 வயதாகும் அஜித்பவார் கடந்த தேர்தலில் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட்டில் அறிவித்தார். இதுதான் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக இருந்தது.
அதேசமயம் அஜித்பவார் தனது சித்தப்பாவிடம் கட்சியைப் பறித்தபோதிலும், அவரது மகன்களை அரசியலுக்கு உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது மகன் பாரத்பவார் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அஜித்பவார் மரணத்தால் அவர் தலைமையில் செயல்படும் தேசியவாத காங்கிரஸ் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.