பாலமுரளி கிருஷ்ணா, அகண்டா என இரட்டை வேடங்களுக்கு ஆக்ஷன், பன்ச் வசனம் உள்ளிட்ட தனது டிரேட்மார்க் விஷயங்களால், கதாபாத்திரத்தின் மசாலா தன்மையைக் கூட்டி ‘ஐ எம் தி பவர்ஃபுல்’ என நிரூபிக்கிறார் நந்தமுரி பாலகிருஷ்ணா.
ஒவ்வொரு பன்ச் வசனங்களுக்குப் பிறகும் பேசும் ஆங்கிலம், மிகை எக்ஸ்பிரஷன்கள் ஆகியவற்றால் திரையரங்கத்தை பிளாஸ்ட் மோடுக்கும் கொண்டுசென்றிருக்கிறார்.
ரெளடிகளை அடித்துப் பறக்கவிடும் பாலமுரளி கிருஷ்ணா 1000 வாலா பட்டாசு என்றால், ராணுவ வீரர்கள், ரோபோட்களை அடித்துத் தூளாக்கும் அகண்டா 10000 வாலா!

ஒரு பாடல், சொற்ப காட்சிகளில் மட்டுமே வந்து போகும் சம்யுக்தாவிற்கு நடிப்பில் பெரியளவில் வேலை இல்லை.
சிறிது நேரம் வந்தாலும் தனது உடல்மொழி, முகபாவனைகளால் கவர்கிறார் ஆதி பினிஷெட்டி. ஆனால், வலுவின்றி எழுத்தப்பட்டிருக்கும் இவரின் கதாபாத்திரம் ஆதியின் நடிப்பை வீணடித்திருக்கிறது.
படத்தின் முக்கிய எமோஷனைத் தாங்கிப் பிடிக்கும் ஹர்ஷாலி மல்ஹோத்ரா தனது கதாபாத்திரம் கோரும் அழுத்தமான நடிப்பை எட்டிப் பிடிக்காதது ஏனோ!
டெம்ப்ளேட் அரசியல்வாதி, வெளிநாட்டு வில்லன் கதாபாத்திரங்களில் கபீர் துகன் சிங், சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் டீசண்ட் ரக நடிப்பை வழங்கிச் செல்கிறார்கள்.