பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை

11
Spread the love

நாட்டின் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வரும் புலனாய்வு அமைப்பின் பன் முகமை மையத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா, புதுதில்லியில் இன்று (19.07.2024) ஆலோசனை நடத்தினார்.

12

தேசப் பாதுகாப்பில்

கூட்டத்தில் பேசியஅமித் ஷா, தேசப் பாதுகாப்பில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களிடம்  அறிவுறுத்தினார்.

தீவிரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை.

இதன் மூலம் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை தடுக்க முடியும்.

இணைந்து செயல்படும் அமைப்பு

13

ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், பன்முகமை மையத்துடனான ஈடுபாட்டை அதிகரித்து, இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும்.

அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகள், போதைப் பொருள்  ஒழிப்பு முகமைகள், இணையப் பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகள், உறுதியான மற்றும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்”  என கேட்டுக் கொண்டார்.

பருவநிலை மாற்றம் மனிதகுலத்தை பாதிக்கும் டைம் பாம்- குடியரசு துணைத்தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *