அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பிரம்மாண்டமான ரோபோடிக் கண்காட்சி ஒன்றை அப்போலோ மருத்துவமனை நடத்தியது. மருத்துவர்கள், மாணவர்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு. ரோபோடிக் கருவிகளை நேரில் பார்வையிட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் கலந்துரையாடினர் இந்த புதுமையான முயற்சி, மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வுக்கான கல்வி, வெளிப்படைத்தன்மை மற்றும் மருத்துவப் புதுமைகளில் அப்போலோ மருத்துவமனைகொண்டுள்ள ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
அப்போலோ மருத்துவமனைகள் பற்றி:
1983-ம் ஆண்டு சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள் தனது முதல் மருத்துவமனையைத் தொடங்கியபோது, அப்போலோ மருத்துவத் துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது
இன்று, 74 மருத்துவமனைகளில் 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தொலைதூர மருத்துவ (Telemedicine) மையங்களுடன் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவை நிறுவனமாக அப்போலோ திகழ்கிறது.
இதய சிகிச்சையில் உலகின் முன்னணி மையங்களில் ஒன்றாக விளங்கும் அப்போலோ, இதுவரை 3,00,000-மேற்பட்ட சிகிச்சைகளையும், 2,00,000-க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகளையும் ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த சிகிச்சை செய்வதற்காக, மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஆராய்ச்சி மற்றும் கிடைப்பதை உறுதி புத்தாக்கங்களில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது: இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பங்கள், மருத்துவக் கருவிகள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அப்போலோ குடும்பத்தைச் சேர்ந்த 1,20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மிகச்சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதிலும், இந்த உலகத்தை நாம் பெற்றதை விடச் சிறந்ததாக மாற்றிக் காட்டுவதிலும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்