விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் “பெஸ்ட் மாம்’ விருதைப் பெற்றார் நடிகர் சிவகார்த்திகேயனின் அம்மா ராஜி தாஸ். விருது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அம்மாவுக்கு கிடைத்த விருதுபற்றி பேசிய சிவகார்த்திகேயன், “அப்பா இறக்கும்போது நான் ஃபர்ஸ்ட் இயர், அக்கா வந்து காலேஜ் செகண்ட் இயர். அதுக்கப்புறம் எல்லாருக்குமே ரெண்டு கேள்விதான் ‘அடுத்து என்ன செய்யப் போறோம் லைஃப்ல’.
அம்மா ஒன்னு மட்டும் தான் சொல்லிட்டே இருப்பாங்க படிச்சிடணும் படிச்சிடணும் நல்லா படிச்சிடணும் அப்படின்னு. சோ படிக்கணும்ங்கறது மட்டும் தான் மைண்ட்ல இருந்துட்டே இருந்துச்சு. ஆனா அதை தாண்டி எனக்கு ஒரு கனவு இருந்தது.