காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருள் பெத்தையா கூறுகையில், “நிகழ்ச்சி நடத்தக்கூடாது என காவல்துறை எங்களையும், ஓட்டல் நிர்வாகத்தையும் அச்சுறுத்தியது. ரவுடிகள் ஊடுருவியிருப்பதாகச் சொன்னார்கள்.
அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் மாநில தலைவரின் டிரைவர் ஜார்ஸ் என்பவரைத்தான். ஜார்ஸ் 20-க்கும் மேற்பட்டோருடன் வந்திருந்தார். அவர்களது கோஷங்களும் வார்த்தைகளும் மிக மோசமானவை.
40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், இப்படி ஒரு சாதிய வன்மத்தை இப்போதுதான் பார்க்கிறேன். காங்கிரஸின் நிலைமை இவ்வளவு தாழ்ந்துவிட்டதா என நினைத்து வெட்கி தலைகுனிகிறேன். காவல்துறையும் முழுமையாக அவர்களுக்கே ஆதரவாக இருந்தது” என வெடித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடமே விளக்கம் கேட்டோம், “அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஜார்ஸ்’ என்ற பெயரில் என்னிடம் ஓட்டுனரும் இல்லை” என்றார்.