BB Tamil 9: “அது ஒரு நல்ல பாம்பே கிடையாது; சரியான விஷப்பாம்பு” – அரோரா குறித்து பார்வதி| Parvathy about aurora

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது.

அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், “நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம்” என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார்.

“ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும்” என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார்.

“அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு” என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *