பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர்.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.
இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கம்ருதீனும், பார்வதியும் மோதிக்கொண்டார்கள்.
கம்ருதீன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் பார்வதி கதறி அழுதார். ப்ரீஸ் டாஸ்க் (ஃபேமிலி டாஸ்க்) முடிந்ததில் இருந்தே கம்ருதீன் பார்வதி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.