BB Tamil 9: "இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது" – விஜே பார்வதி, கம்ருதீனைச் சாடிய விஜய் சேதுபதி

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.

மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.

BB Tamil 9
BB Tamil 9

அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.

அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.

குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார்.

வலுக்கும் எதிர்ப்புகள்

இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, “நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். நம்மகிட்டதான் வாய் இருக்கே… எதுவா இருந்தாலும் பேசி சமாளிச்சுக்கலாம், நியாயப்படுத்திக்கலாம்னு நினைக்கிற எண்ணம் இருக்கு பாருங்க… இது யாருக்கு நடந்தாலும் சரி, எங்க நடந்தாலும் சரி பொறுத்துக்க முடியாது. பொறுத்துக்கவும் மாட்டேன்” என்று பார்வதியையும், கம்ருதீனையும் சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *