வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம் என இந்த டாஸ்க்கிலும் கலவரம் வெடிக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் ஹவுஸ்மேட்ஸ் ஒருவர் வார்டனாக இருக்கும் பார்வதிக்கு ஒரு லெட்டரை அனுப்பியிருந்தார்.
அதில் பார்வதியை பர்சனலாக அட்டாக் செய்திருப்பதால் அவர் கோபப்பட்டார்.
“இது ஒரு கேவலமான ஆட்டிட்யூட். ஒருத்தவுங்க கேரக்டரை எப்படி ஜட்ஜ் பண்ண முடியும்.
இந்த லெட்டர் மூலமா என்னைய பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க” என பார்வதி சொல்ல அமித் இதை ஏன் சொல்லிட்டே இருக்கீங்க? என கத்தினார்.
நான் உங்களை சொல்ல-ல சார். என்னோட பாயின்ட்டை புரிஞ்சுக்க மாட்டீங்களா? என பார்வதி கோபப்பட்டார்.