BB Tamil 9: "எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல"- பிரஜினிடம் பேசிய ஆரி

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருக்கிறார்.

நடிகர் ஆர்யன் - கம்ருதீன்
நடிகர் ஆர்யன் – கம்ருதீன்

அந்தவகையில் “அடுத்த 50 நாளுக்கான வைப் ( Vibe) இந்த வீட்டுல உச்சத்துல இருக்கணும். அதுக்கு நடுவுல FJ இருக்கணும்” FJ விடம் அவரது நண்பர் பேசுகிறார்.

கம்ருதீனிடம் “இந்த கேம்ம நீ தனியா விளையாண்ட அப்படின்னா அந்த பினாலே ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கான அவ்வளவு தகுதியும் உன் கிட்ட இருக்கு” என நடிகர் ஆர்யன் சொல்கிறார்.

தொடர்ந்து ” மத்தவங்களை ஜெயிக்க வைக்க வந்த சப்போர்ட்டிங் கேரக்ட்டர் நீயா? இல்ல, டைட்டில் ஜெயிக்க போற மெயின் கேரக்ட்டர் நீயா?” என கனி திருவிடம் அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி கேட்கிறார்.

விஜயலட்சுமி - கனி திரு
விஜயலட்சுமி – கனி திரு

அதேபோல “எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல. இந்த ஷோல உன்னோட எக்ஸ்பீரியன்ஸை காட்டாம உன் வாழ்க்கையில நீ எங்க காட்ட போற” என நடிகர் ஆரி பிரஜினிடம் சொல்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *