பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாள்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில், கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை.
மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், விஜய் சேதுபதிக்கும், ரம்யா ஜோவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
வார இறுதி டாஸ்கிற்காக என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி, “டாஸ்கில் விக்ரமை அங்கிருந்து எதுக்கு எழுப்புறீங்கன்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?” என்று ரம்யாவை கேள்வி கேட்கிறார்.
அதற்கு “சீரியஸா எனக்கு தெரியாது சார்” என்று ரம்யா சொல்கிறார்.