நாமினேஷன் பிராசஸ் ஆரம்பித்தது. எந்த இருவரை நாமினேட் செய்கிறோமோ அவரின் முகத்தில் பெயின்ட்டை பூச வேண்டும். “சொன்னவுடனே வேலை செஞ்சா ஈஸியா முடியும். ஆனா அதை ஊதி பெருசாக்குறாங்க” என்று பாருவை நாமினேட் செய்தார் வினோத்.
சான்ட்ராவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது, தனியாக அமர்ந்து அழுவது, ஆத்திரப்பட்டு அனைவரையும் கத்துவது போன்ற காரணங்கள் சொல்லப்படும் போது இறுக்கமான ரோபோ முகத்துடன் இருந்தார் சான்ட்ரா. எஃப்ஜேவிற்கும் கம்முவிற்கும் அவர்களின் முன்கோபம், ஆட்சேபகரமான வார்த்தைகள் காரணமாக சொல்லப்பட்டன. ஆதிரையை எஃப்ஜே அவதூறாகப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் விக்ரம்.
“விக்ரம் தப்பிச்சிட்டானே” – பாரு வயிற்றெரிச்சல்
கனியையும் அரோவையும் நாமினேட் செய்து பழிவாங்கினார் பாரு. கம்ருதீனை நாமினேட் செய்த சான்ட்ரா, “திவ்யாவைத் திட்டும்போது பேச முடியாம போச்சு. அதற்காக இப்போது நாமினேட் பண்றேன்” என்று நல்ல பிள்ளையாக சீன் போட்டார். (ஹோஸ்ட் அறிவுறுத்தியதால் இந்த நாடகம்!)
ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், சான்ட்ரா, அமித், எஃப்ஜே, கம்ருதீன், அரோரா, ஆதிரை, திவ்யா, சுபிக்ஷா, சபரி, கனி மற்றும் பாரு. தன்னுடைய பெயர் வராது என்று நினைத்திருந்த பாருவிற்கு கடைசியில் ஆப்பு வைத்தார் பாரு. இந்த வாரம் எஸ்கேப் ஆனவர் விக்ரம் மட்டுமே.
“விக்ரம் எப்படி தப்பிச்சான்னு தெரியலையே… போச்சே.. போச்சே.. நான் ரெண்டு பேரை டார்கெட் பண்ணேன்.. அதனால விட்டுட்டேன். வேற யாராவது பண்ணுவாங்கன்னு நெனச்சே.. போச்சே. போச்சே.. விக்ரமை நாமினேட் பண்ண எனக்கு காரணங்கள் இருக்கு. ஆதிரை கேஸை சீக்கிரமா முடிச்சது” என்று பாரு புலம்ப “நாமினேட் ஆனாலும் எனக்கு கவலை இல்லை. ஆனா நீ காண்டாவுற பார்த்தியா.. அதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு “ என்று கூலாகச் சொன்னார் விக்ரம்.