BB Tamil 9 Day 80: “கேமை விட கேரக்டர் முக்கியம்”-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு – நடத்து என்ன?

Spread the love

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா.

“இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 80

சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா. 

நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது. 

“இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *