BBL: ரன் ஓட மறுத்த ஸ்மித்; வெறுப்படைந்த பாபர் அசாம்! – Big Bash தொடரில் நடந்தது என்ன? | Video

Spread the love

பிக் பேஷ் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று (ஜன.16) நடைபெற்ற போட்டியில் டேவிட் வார்னரின் சிட்னி தண்டர் மற்றும் ஹென்றிக்ஸின் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

பிக் பேஷ் லீக் தொடரில்...
பிக் பேஷ் லீக் தொடரில்…

முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்திருந்தது.

சேஸிங்கை தொடங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம் இருவரும் களமிறங்கினர்.

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஸ்மித் அதிரடியாக ஆடிய நிலையில் பாபர் அசாம் மெதுவாக ஆடினார்.

அதிலும் 11-வது ஓவரில் 3 பந்துகளில் பாபர் அசாம் 1 ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால் கோபமடைந்த ஸ்மித் அந்த ஓவரின் கடைசி பந்தில் பாபர் அசாம் சிங்கிள் எடுக்க அழைத்தப்போது மறுப்பு தெரிவித்துவிட்டார்.

அடுத்த ஓவரை தானே சந்தித்துக் கொள்கிறேன் என்று ஸ்மித் கூறிவிட்டார்.

ஸ்டீவ் ஸ்மித் - பாபர் அசாம்
ஸ்டீவ் ஸ்மித் – பாபர் அசாம்

இதைத் தொடர்ந்து அடுத்து ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து 32 ரன்கள் குவித்தார்.

இறுதியாக ஆட்டம் இழந்து வெளியே சென்ற பாபர் அசாம் பவுண்டரி லைனை பேட்டால் அடித்து விட்டு கோபமாக உள்ளே சென்றார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்டீவ் ஸ்மித் வெறும் 42 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

சிட்னி சிக்சர்ஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *