Bigg Boss Tamil 9: அரங்கேறிய இரண்டு ட்விஸ்டுகள்; மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்?

Spread the love

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் 9 பாதி நாட்களைக் கடந்து விட்டது.

இதில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர். கடந்த வாரம் கெமி வெளியேறினார்.

 Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது. எனவே அடுத்த சில தினங்களில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் அமித் பார்கவ், சாண்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

இந்தச் சூழலில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட் இன்று காலை தொடங்கியது.

வழக்கமான விசாரிப்புகளை மேற்கொண்டார் விஜய் சேதுபதி. பிறகு எவிக்ஷனுக்கான நேரம்.

சாண்ட்ரா, ரம்யா, கனி உள்ளிட்ட பலர் நாமினேஷன் பட்டியலிலிருந்த நிலையில் முதலில் டபுள் எவிக்ஷன் இருக்குமெனச் சொல்லப்பட்டது.

அரோரா, ஆதிரை
அரோரா, ஆதிரை

சாண்ட்ரா, ரம்யா, வியானா மூவரில் இருவர் வெளியேறலாம் எனவும் தகவல்கள் கசிந்தன.

இந்த நிலையில் தற்போது ஒரு ட்விஸ்ட்டை அரங்கேற்றியிருக்கிறாராம். பிக்பாஸ்.

அதாவது இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக நோ எவிக்‌ஷன் என பிக்பாஸ் அறிவித்திருப்பதாகவும், கூடவே அடுத்த அதிரடியாக ஆரம்பத்தில் வெளியேறிய ஆதிரையை மீண்டும் அந்த வீட்டுக்குள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *