பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப் பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் கானா வினோத்.
வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர் விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் முந்தைய சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் கொண்டாடங்களின் போது கானா பாட்டு பாடியிருக்கிறார்.
அந்த தொடர்பில்தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததாகத் தெரிகிறது.