12 பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல்
இது மற்ற குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைப் பாதிக்கக்கூடும் என்று உறுப்பினர்கள் அஞ்சினர் என்று அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிட்டிகள் வைத்திருக்கும் துப்பாக்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறதா என்றும், அவர்களை பாதுகாப்புக்கு நிறுத்த போலீஸில் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்றும் அக்கட்டிட நிர்வாக கமிட்டி கேள்வி எழுப்பி இருக்கிறது .
அக்கட்டிடத்தில் ரன்வீர் சிங்கும், அவரது மனைவி தீபிகா படுகோனேயும் தங்களது மகளுடன் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் 12க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரமுகர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் விடுத்துள்ளது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இது குறித்து போலீஸில் புகார் செய்யவில்லை. அவர்களுக்கு இது தொடர்பாக மிரட்டல் போன் வந்துள்ளது. ஆனால் நடிகர்கள் அது போன்ற நம்பர்களை பிளாக் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ரன்வீர் சிங் செயலாளரும் அது போன்ற நம்பரை பிளாக் செய்திருக்கவேண்டும் என்றும், எனவேதான் அக்கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த வாரம் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். அவர்களை பிடிக்கவே போலீஸார் திணறி வருகின்றனர். ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் விடுத்திருக்கும் நபர் தனி நபராக இருக்கவேண்டும் என்றும், அவர் யார் என்பது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும், தனது அடியாட்கள் மூலம் மும்பையில் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்து வருகிறான். இப்போது மும்பையில் மாபியாக்களின் செயல்பாடு குறைந்து இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்க லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் முயற்சி செய்வதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.