Book Fair: “சாதி, நிலம், பொருளாதாரம் போன்றவற்றையும் பேசுவதுதான் தலித் பெண்ணியம்”- எழுத்தாளர் சிவகாமி | chennai book fair 2026 writer sivagamy’s view on feminist literature

Spread the love

சாதாரண பெண்ணியம் பேசுபவர்கள் ஆண்களின் அடக்குமுறையைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, சாதிய ஒடுக்குமுறையால் பெண்கள் குறிப்பாக தலித் பெண்கள் ஒடுக்கப்படுவதை அவர்கள் பேசுவது இல்லை.

பெண்களின் ஒடுக்குமுறையே சாதியில்தான் அடங்கி இருக்கிறது. இதைப் பற்றி பேசுவதுதான் தலித் பெண்ணியம். தலித் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மட்டும் மையம் கொள்ளாமல், பெண்கள் பொருளாதாரத்தை கையில் எடுப்பது பற்றியும், மற்றொன்று நிலம், சொத்து ஆகியவற்றிலிருந்து பெண்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் பேசுபொருளாக்குகிறது.

அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கான தனி பட்ஜெட் பற்றிப் பேசுகிறது, சூழலியல் பற்றிப் பேசுகிறது, இயற்கை பேரிடர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வது பற்றிப் பேசுகிறது. இந்த உலகில் ஆண்கள் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்களோ அந்தப் பிரச்னைகள் யாவையும் பெண்களுக்கும் எதிர்கொள்கிறார்கள்.

சென்னை புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி

ஆனால், அதைப் பற்றி பெண்கள் பேசும்போது, அது ஆண்கள் பேசட்டும் நாம் ஆணாதிக்கத்தை மட்டும் பேசுவோம் என்பது போன்று இருந்தது. ஆனால் தற்போது தலித் பெண்ணியம் வந்த பிறகு நிலம், கல்வி அவர்களுக்கான சலுகைகளைப் பற்றிப் பேசுகிறது.

ஒரு சாதி இந்து பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, நிலமற்ற தலித்களுக்கும், தலித் பெண்களுக்கும் கிடைப்பது அரிதான ஒன்றே.

பெண்ணிய எழுத்தாளர்களைப் பொருத்தவரை, கூட்டுக் குடும்பத்தில் எவ்வாறு பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரம் ஆடைகளில் ஆண்கள் எப்படித் தலையிடுகிறார்கள், பகடிவதை (ஈவ்டீசிங்) உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது பற்றிதான் எழுதுகிறார்கள்.

அவர்கள் சாதியைப் பற்றி எழுதுவது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக இந்தச் சமூகத்தில் அனைத்து சாதிய ஆதிக்கமும் கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய தலித்களின் மீதுதான் விழுகின்றன. அதிலும் தலித் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தலித் பெண்ணியம்தான் அவர்கள் பேசாததையும் பேசுகிறது.

சென்னை புத்தகக் காட்சி

சென்னை புத்தகக் காட்சி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *