சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை மாற, சமூகத்தில் எங்கள் வாழ்வை அறிய எனது ஐந்து புத்தக பரிந்துரைகள்.
1. “பஸ்தி” நான் எழுதிய புத்தகம். இதை படித்தால் உங்களுக்கு சிறிய அளவிலாவது எங்களைப் பற்றிய புரிதல் உண்டாகும்.
2. எங்களை அரசியல் கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்றால் “கிரேஸ் பானுவின் சிந்தனைகள்” என்ற எனது புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.
3. கவிதை சார்ந்த புத்தகங்களாக வாசிக்கும் போது “காலிடுக்கில் ஒப்பந்தங்கள்” திருநங்கை ஆல்கா எழுதிய புத்தகம் இது.
4. “திருநம்பி சோனேஷ் அவர்களின் “உன்னைக் கொடு” திருநங்கைகளின் பார்வையில் எவ்விதமான உணர்வுகள் வெளிப்படுகின்றன என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நூல்.
5. புதிதாக எங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “கோவில்பட்டி டூ சென்னை வழித்தடங்கள்” தற்போதைய திருநங்கைகள் வாழ்வை பற்றிய சிறந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது.!
