இது இளைஞர்களின் எண்ணங்கள், ஆசைகளைப் பிரதிபலிக்கும் ‘யுவ சக்தி’ (இளைஞர் சக்தி) பட்ஜெட் ஆகும். இந்தப் பட்ஜெட் புதிய தலைவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் உருவாக்கும். இந்தியாவை உலகளாவிய தரவு மையமாக மாற்ற வரிச்சலுகைகள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் இதில் உள்ளன.
சுற்றுலாத் துறையை, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த பட்ஜெட் எடுத்துள்ள நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. விவசாயம், மீன்வளம் மற்றும் பால்வளத் துறைகளில் எனது அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக தேங்காய், முந்திரி, சந்தன உற்பத்தியை மேம்படுத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கவனிக்கத்தக்கவை. இதன் மூலம் கிராமங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.