காபி கொட்டை துளைப்பான் வண்டுகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலை ஆய்வாளர்கள்,
“காபி பயிர்களுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் காபி கொட்டை துளைப்பான் பூச்சிகளை 1990-ஆம் ஆண்டு முதன்முதலில் கூடலூரில் கண்டறியப்பட்டது.
கட்டுப்படுத்தப்பட்ட துளைப்பான் பூச்சிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கூடலூர் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் தற்போது பரவியுள்ளது.

மிகச் சிறிய வண்டான இது காபி பழத்தினுள் நுழைந்து கொட்டைகளை சேதப்படுத்தி, அதனுள்ளேயே முட்டைகளையும் இடுகின்றது. அதிலிருந்து வெளிவரும் பூச்சிகள் காபி கொட்டைகளை தின்று விளைச்சலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.