Couple kidnaps child while pretending to drink cold drinks in Thoothukudi-தூத்துக்குடியில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின்  மனைவி,  முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை  நடத்தி வருகின்றனர். அந்தக் கடை முன்பு  அவர்களது கபிலேஷ் என்ற 2 வயது  ஆண் குழந்தை கடையின் விளையாடி கொண்டிருந்தது.

இந்த நிலையில்,  கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்த ஒரு தம்பதியினர் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஒரு கட்டத்தில் தாங்கள் வந்த பைக்கில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, உடனே  பைக்கை ஸ்டார்ட் செய்து குழந்தையை கடத்திக் கொண்டு சென்று விட்டனர். 

மீட்கப்பட்ட குழந்தை

மீட்கப்பட்ட குழந்தை

பரிதவித்த தாய் முத்துச்செல்வி,  குலசேகரபட்டினம்  காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி கதறியழுதார். இதனையடுத்து பைக்கில் தம்பதியினர் சென்ற வழியே போலீஸார்  தேடிச்சென்றனர். அப்போது  குழந்தை தொடர்ந்து அழுததால், காரைக்கால் அம்மையார் கோயில்  அருகில் பைக்கை நிறுத்தி விட்டு  குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் சந்தேகத்தின் பேரில் அத்தம்பதியினரை பிடித்து விசாரிக்கும் போது குழந்தையை கடத்தி வந்தது தெரிய வந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *